மக்கள் குறைகளை தீர்க்காத ‘கோமா’ அரசு: திருச்சி சம்பவத்தில் திமுகவை சாடிய இபிஎஸ்

2 hours ago 1

சென்னை: திருச்சியில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்து மூன்று பேர் உயிரிழந்தது தொடர்பாக, ‘மக்களின் குறைகளை கேட்காத, அவற்றை நிறைவேற்றாத திமுக அரசு, ஒரு கோமா அரசு’ என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

Read Entire Article