மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சபாநாயகராகிறார் ராகுல் நர்வேகர்

2 months ago 12

மும்பை: மகாராஷ்டிரா சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 12 நாட்கள் இழுபறிக்குப் பிறகு, கடந்த 5ம் தேதி நடந்த பதவியேற்பு விழாவில் முதல்வராக தேவேந்திர பட்நவிசும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டே மற்றும் அஜித்பவார் ஆகியோரும் பதவியேற்றனர். இந்நிலையில், பாஜ எம்எல்ஏ ராகுல் நர்வேகர், சபாநாயகர் பதவிக்கு நேற்று மனுத்தாக்கல் செய்தார். நர்வேகர் மட்டுமே மனுத் தாக்கல் செய்திருப்பதால், போட்டியின்றி அவர் இந்தப் பதவிக்கு இன்று தேர்வு செய்யப்படுவார்.

இதனிடையே, உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திரபவார் கட்சி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அடங்கிய எதிர்க்கட்சிகள் கூட்டணியான மகா விகாஸ் அகாடி கட்சி தலைவர்கள், உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா தலைவர் பாஸ்கர் ஜாதவ் தலைமையில் காங்கிரஸ் மாநில தலைவர் நானா படோலே உள்ளிட்டோர் ஏக்நாத் ஷிண்டேவை நேற்று சந்தித்து துணை சபாநாயகர் பதவியை எதிர்க்கட்சிகளுக்கு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

The post மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் சபாநாயகராகிறார் ராகுல் நர்வேகர் appeared first on Dinakaran.

Read Entire Article