மகளிர் பிரீமியர் லீக்: பெங்களூரு அணியிலிருந்து முக்கிய வீராங்கனை விலகல்

3 hours ago 2

பெங்களூரு,

இந்தியாவில் மகளிர் கிரிக்கெட்டை மேம்படுத்தும் விதமாக மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரை பி.சி.சி.ஐ 2023-ம் ஆண்டு தொடங்கியது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இதுவரை இரண்டு சீசன்களை கடந்துள்ள இத்தொடரானது 3-வது சீசனை நோக்கி அடியெடுத்து வைத்துள்ளது. இதில் முதல் சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியும், 2-வது சீசனில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளன.

இதனையடுத்து மகளிர் பிரீமியர் லீக் தொடரின் 3-வது சீசன் நாளை (14-ம் தேதி) தொடங்கவுள்ளது. அதன்படி இத்தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளது.

இந்நிலையில் இந்த தொடருக்கான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியிலிருந்து முக்கிய வீராங்கனை ஆஷா சோபனா விலகியுள்ளார். இவருக்கு பதிலாக நுஜாத் பர்வீன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.


Read Entire Article