தைப்பூச திருவிழா: பழனி முருகன் கோவிலில் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம்

2 hours ago 2

பழனி,

பழனி முருகன் கோவிலில் நடைபெறும் திருவிழாக்களிலேயே தைப்பூசம் மிகவும் பிரசித்தி பெற்றது. விழாவின் சிறப்பு அம்சமே பக்தர்கள் பாதயாத்திரையாக பழனிக்கு வந்து முருகப்பெருமானை தரிசனம் செய்வது தான். அதன்படி, இந்த ஆண்டு தைப்பூச திருவிழா கடந்த 5-ந்தேதி தொடங்கியது. இதையொட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்தனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் 10-ந் தேதியும், தேரோட்டம் 11-ந்தேதியும் நடைபெற்றது. இதையொட்டி சாமி தரிசனம் செய்ய பழனியில் லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கமித்தனர். பக்தர்களின் வசதிக்காக கடந்த 10-ந்தேதி முதல் 3 நாட்கள் பழனி முருகன் கோவிலில் சிறப்பு தரிசன கட்டணம் ரத்து செய்யப்பட்டது. இதனால் அனைத்து பக்தர்களும் இலவசமாக தரிசனம் செய்தனர்.

தைப்பூச திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகள் முடிந்தாலும் பக்தர்கள் பழனிக்கு பாதயாத்திரையாக வந்து தரிசனம் செய்துவிட்டு செல்கின்றனர். கடந்த 3 நாட்களில் மட்டும் பழனியில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Read Entire Article