போலீசாரை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு

2 weeks ago 2

 

தேனி, ஜன. 26: தேனி அருகே, குற்றவாளியை பிடிக்க சென்ற போலீசாரை மிரட்டிய 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் சப்.இன்ஸ்பெக்டராக இருப்பவர் பன்னீர்செல்வன். இவர், கஞ்சா தொடர்பான வழக்கில் தேனி அருகே அரண்மனைப்புதூரைச் சேர்ந்த அய்யாத்துரை மகன் மகேந்திரன் என்பவரை பிடிக்க கடந்த 23ம் தேதி இரவு போலீசாருடன் அவரது வீட்டிற்கு சென்றார்.

அங்கே இருந்த மகேந்திரனை பிடிக்க முயன்றபோது, அவரது மனைவி ஷீலா, மகள் அபிநயா ஆகியோர், அவரை கைது செய்ய விடாமல் தடுத்து போலீசாரை அவதூறாக பேசி மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சப்.இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வன் அளித்த புகாரின்பேரில் பழனிசெட்டிபட்டி போலீசார் மகேந்திரன், அவரது மனைவி ஷீலா, மகள் அபிநயா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post போலீசாரை மிரட்டிய 3 பேர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Read Entire Article