குஜராத்: குஜராத்தில் போலியாக மருத்துவக் கல்வி வாரியம் நடத்தி, ரூ.70,000 ரூபாய்க்கு மருத்துவர் சான்றிதழ் வழங்கிய கும்பல் கைது செய்யப்பட்டுள்ளது. சுமார் 12,000 போலிச் சான்றிதழ்களை விற்றுள்ளதாக தகவல். இக்கும்பலிடம் சான்றிதழ் வாங்கி, கிளினிக் நடத்தி சிகிச்சை அளித்து வந்த 14 போலி மருத்துவர்களும் கைது. மருத்துவக் கல்வி சான்றிதழ் வாங்கியவர்கள், ஒவ்வொரு ஆண்டும் ரூ.15,000 வரை செலுத்தி, சான்றிதழை புதுப்பித்தும் வந்துள்ளனர்.
The post போலியாக மருத்துவக் கல்வி வாரியம் நடத்தி சான்றிதழ் வங்கி வந்த கும்பல் கைது! appeared first on Dinakaran.