போலி பதிவெண் காரில் வந்த பாஜ நிர்வாகி

1 week ago 6


பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அடைக்கம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் இளஞ்செழியன்(40). இவரிடம் TN 46 X 1180 என்ற பதிவெண் கொண்ட கருப்பு நிற கார் உள்ளது. இதே வகை கார் இதே பதிவெண்ணுடன் பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா டி.களத்தூர் சாலையில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இதைப்பார்த்த இளஞ்செழியன் மற்றும் அவரது நண்பர்கள் அந்த காரை மடக்கிப் பிடித்தனர். காரை ஓட்டிச் சென்றவர் பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தை சேர்ந்த பிச்சைமுத்து(50) என்பதும், அவர் பாஜகவில் பட்டியல் அணி மாநில செயலாளராக இருப்பதும் தெரியவந்தது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரம்பலூர் போலீசார், இளஞ்செழியன் மற்றும் பிச்சமுத்து ஆகிய இருவரது காரையும் காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்று ஆவணங்களை பார்வையிட்டு தீவிர விசாரணை செய்தனர். போலீஸ் விசாரணையில் இளஞ்செழியனின் கார் பதிவு எண் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சரியாக இருப்பது தெரியவந்தது. பிச்சைமுத்துவின் கார் பதிவெண் போலியாக எழுதப்பட்டிருந்தது தெரியவந்தது. போலீசார் பிச்சைமுத்து மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

The post போலி பதிவெண் காரில் வந்த பாஜ நிர்வாகி appeared first on Dinakaran.

Read Entire Article