போர்ப்பதற்றம் எதிரொலி: நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி ஒத்திவைப்பு

2 hours ago 1

புதுடெல்லி,

ஒலிம்பிக்கில் 2 பதக்கங்கள் (தங்கம் மற்றும் வெள்ளி) வென்று சாதனை படைத்த இந்திய ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு பெருமை சேர்க்கும் வகையில், 'நீரஜ் சோப்ரா கிளாசிக் ஈட்டி எறிதல் போட்டி' இந்தியாவில் நடத்த முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த போட்டி பெங்களூரூவில் உள்ள கண்டீவாரா ஸ்டேடியத்தில் வருகிற 24-ந் தேதி நடக்க இருந்தது.

இந்த ஈட்டி எறிதல் போட்டியில் 2 முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற ஆண்டர்சன் பீட்டர்ஸ் (கிரனடா), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தாமஸ் ரோஹ்லர் (ஜெர்மனி), 2016-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் வெள்ளி வென்ற ஜூலியஸ் யெகோ (கென்யா), கர்டிஸ் தாம்சன் (அமெரிக்கா) உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்க இருந்தனர்.

இந்நிலையில் இந்தியா - பாகிஸ்தான் இடையே போர்ப்பதற்றம் நிலவுவதால் இந்த போட்டி மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article