போர் சூழல் ஒத்திகை - இருளில் மூழ்கியது டெல்லி

14 hours ago 4

புதுடெல்லி,

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா அதிரடி தாக்குதல் நடத்திய நிலையில், நாடு முழுவதும் இன்று மாலை போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு போர் சூழலின்போது எவ்வாறு செயல்படுவது என்பது குறித்து மக்களுக்கு செயல் விளக்கம் அளிக்கப்படவுள்ளது.

இந்தநிலையில், நாடு முழுவதும் இன்று மாலை பெரும்பாலான மாநிலங்களில் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தலைநகர் டெல்லி, மும்பை, சென்னை, புணே போன்ற பெரு நகரங்களிலும் ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் போன்ற எல்லையோர மாநிலங்களிலும் போர் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது.

இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என பலதரப்பில் போர் சூழலின்பொது செயல்படுவது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்காள், பேரிடர் மேலாண்மைத் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மத்திய அரசு வழிகாட்டுதலின்படி ஒத்திகையில் ஈடுபட்டனர். போர் சூழல் ஒத்திகையின் ஒரு பகுதியாக டெல்லியில் மின் விளக்குகள் அணைக்கப்பட்டன. மின் விளக்குகளை அனைத்து டெல்லியின் பல பகுதிகளில் போர் சூழல் ஒத்திகை நடைபெற்றது. இதனால் டெல்லி நகரம் இருளில் மூழ்கியது. நாடாளுமன்ற வளாகம் உள்ளிட்ட டெல்லியில் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது.

Read Entire Article