
சென்னை,
பக்ரீத் பண்டிகை மற்றும் வார இறுதியை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை வழியாக போத்தனூர்-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
போத்தனூர்-சென்னை சிறப்பு ரெயில்(வண்டி எண்.06028) வருகிற 8-ந்தேதி போத்தனூரில் இருந்து இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 8.40 மணிக்கு சென்னை சென்றடையும்.இந்த ரெயில் திருப்பூருக்கு வருகிற 9-ந்தேதி இரவு 12.10 மணிக்கு வந்து 12.12 மணிக்கு புறப்படும்.
சென்னை-போத்தனூர் சிறப்பு ரெயில்(06027) வருகிற 9-ந்தேதி சென்னையில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு மாலை 6 மணிக்கு போத்தனூர் சென்றடையும். இந்த ரெயில் திருப்பூருக்கு மாலை 4.30 மணிக்கு வந்து 4.32 மணிக்கு புறப்படும்.