
திருநெல்வேலி மாவட்டம், பணகுடி பகுதியில் கடந்த 2012-ம் ஆண்டு கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட தூத்துக்குடி மாவட்டம், திருப்பணி புத்தன் தருவையை சேர்ந்த ஞானசிங் (வயது 52) என்பவர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். பின்னர் அவர் நீதிமன்ற விசாரணைக்கு கடந்த 2 மாதங்களாக ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்ததால், அவருக்கு நீதிமன்றத்தில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஞானசிங்கை பணகுடி காவல் துறையினர் தேடி வந்த நிலையில் இன்று (6.6.2025) கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.