எர்ணாகுளம் : போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ கைது செய்யப்பட்டார். கொச்சியில் உள்ள ஓட்டலில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின்போது போலீசாரைக் கண்டதும் முகத்தை மூடிக் கொண்டு நடிகர் சாக்கோ தப்பியோடினார். நடிகர் சாக்கோ தப்பியோடிய காட்சி சிசிடிவியில் பதிவான நிலையில் எர்ணாகுளம் போலீஸ் தேடி வந்தது. நேற்று சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் எர்ணாகுளம் டவுன் வடக்கு காவல் நிலையத்தில் சாக்கோ ஆஜரானார். காவல் நிலையத்தில் விசாரணைக்கு ஆஜரான நடிகர் டாம் சாக்கோவை கைது செய்தது போலீஸ். குட் பேட் அக்லி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் டாம் சாகோ.
The post போதைப்பொருள் பயன்படுத்திய விவகாரத்தில் மலையாள நடிகர் டாம் சாக்கோ கைது!! appeared first on Dinakaran.