‘தேர்வெழுதி 7 ஆண்டாக காத்திருக்கிறோம்’ - மோட்டார் வாகன ஆய்வாளர் பதவி நியமனம் எப்போது?

9 hours ago 3

மோட்டார் வாகன ஆய்வாளர் பதவிக்கான தேர்வு முடிவுகளை விரைந்து அறிவித்து, நியமன ஆணைகளை வழங்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

போக்குவரத்து சார்ந்த பணிகளை மேற்கொள்வதற்காக தமிழகம் முழுவதும் வட்டார போக்குவரத்து அலுவலகம், பிரிவு அலுவலகம் என 150-க்கும் மேற்பட்ட அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு மோட்டார் வாகன ஆய்வாளர், வட்டார போக்குவரத்து அலுவலர்கள் ஆகியோர் பணிகளை கண்காணித்து மேற்கொண்டு வருகின்றனர். இதற்கான பணிகளில் பெரும்பாலானவற்றை கணினி மயமாக்கிய போதும், அலுவலர்கள் பற்றாக்குறை என்பது தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இதையடுத்து போதிய பணியாளர்களை நியமிக்க வேண்டும் என பட்டதாரிகள், அரசியல் கட்சித் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

Read Entire Article