சென்னை: வாகன சோதனையின்போது அடையாறு ஆற்றில் குதித்த இளைஞரை காப்பாற்றாத போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை அடையாறு திருவிக பாலம் அருகே 2018-ம் ஆண்டு போக்குவரத்து உதவி ஆய்வாளர் விஜயரங்கன் உட்பட சில காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக ராஜா அண்ணாமலைபுரத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன், சுரேஷ் ஆகியோர் இரு சக்கர வாகனத்தில் வந்தனர். இருவரும் ஹெல்மெட் அணியாமல் இருந்ததால் அவர்களை நிறுத்தி உதவி ஆய்வாளர் விஜயரங்கன் விசாரித்தார்.