போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றம்

2 months ago 8

ஓசூர், நவ.15: ஓசூர்-பாகலூர் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடைகளை போக்குவரத்து போலீசார் அகற்றினர். ஓசூர் மாநகராட்சியில், எந்த நேரமும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளில் ஒன்றாக பாகலூர் சாலை உள்ளது. இந்த பகுதியில் ஏராளமான துணிக்கடைகள், வணிக வளாகங்கள், தள்ளுவண்டி பழக்கடைகள், கடைகளின் விளம்பர பாதாகைகள் இருப்பதாலும், சாலைகள் குறுகலாக இருப்பதாலும், போக்குவரத்து நிரம்பி காணப்படும். போக்குவரத்து நெரிசலை குறைக்க, சாலையோர தள்ளுவண்டி கடைகள், விளம்பர பதாகைகளை அகற்றுமாறு போக்குவரத்து போலீஸ் எஸ்ஐ சத்யா தலைமையில், போலீசார் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில், நேற்று சாலையோர கடைகள் அகற்றப்பட்டது. மேலும், சாலையோரங்களில் கடைகள் வைத்தாலோ, இருசக்கர வாகனங்களை நிறுத்தினாலோ பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கை செய்தனர்.

The post போக்குவரத்திற்கு இடையூறாக இருந்த கடைகள் அகற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article