சென்னை: பொள்ளாச்சி சம்பவத்தில் வழக்கு கூட பதியாமல் குற்றவாளிகளை காப்பாற்ற முயன்றது பழனிசாமி அரசு என எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகள் போராட்டத்தால் வேறு வழியின்றி பொள்ளாச்சி வழக்கு சிபிஐக்கு மாற்றினார்கள். முதல்வர் சுட்டிக்காட்டி பேசியதும் அவதூறுகளை அள்ளி வீசிச் சென்றிருக்கிறார் பழனிசாமி. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவினரை இ.பி.எஸ். காப்பாற்ற முயன்றார். பழனிசாமி மேற்கொண்ட பித்தலாட்டங்களுக்கும், மூடி மறைக்க முயன்ற முயற்சிக்கும் அளவில்லை. பச்சைப் பொய் பேசுவதில் பழனிசாமிக்கு நிகர் பழனிசாமிதான் என்பதை மக்கள் நன்கு அறிவர் என அவர் தெரிவித்தார்.
The post பொள்ளாச்சி பாலியல் வழக்கில் அதிமுகவினரை இ.பி.எஸ். காப்பாற்ற முயன்றார்: பழனிசாமிக்கு அமைச்சர் ரகுபதி கண்டனம் appeared first on Dinakaran.