பொரியரிசி உருண்டை

2 hours ago 1

தேவையான பொருட்கள்

அரிசி -1 டம்ளர்.
தண்ணீர்-2 கப்.
உப்பு-சிறிதளவு.
நாட்டுச்சர்க்கரை-1கப்.
ஏலக்காய் பொடி-2 தேக்கரண்டி.
துருவிய தேங்காய்-தேவையான அளவு.

செய்முறை:

முதலில் கடாயில் 1 டம்ளர் அரிசியை சேர்த்து நன்றாக பொன்னிறமாக வறுத்து அதை மிக்ஸியில் சேர்த்து சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.இப்போது ஒரு கடாயில் 2 கப் தண்ணீர் விட்டு, சிறிது உப்பு சேர்த்து தண்ணீர் நன்றாக கொதித்ததும் அரைத்து வைத்திருக்கும் அரிசி மவை சேர்த்து கலந்துவிட்டுக் கொள்ளவும். இப்போது இதில் ஏலக்காய் பொடி 2 தேக்கரண்டி, நாட்டு சர்க்கரை 1 கப் சேர்த்து கலந்துவிட்டு இறக்கவும்.இப்போது இது ஆறியதும் உருண்டைகள் உருட்டி துருவிய தேங்காயில் இந்த உருண்டைகளை போட்டு பிரட்டி எடுத்தால் அல்டிமேட் சுவையில் பொரி அரிசி உருண்டை தயார்.

 

The post பொரியரிசி உருண்டை appeared first on Dinakaran.

Read Entire Article