பொன்னமராவதி அருகே சேரனூரில் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும்

3 months ago 9

 

பொன்னமராவதி, பிப். 15: பொன்னமராவதி அருகே சேரனூரில் 40 ஆண்டுகளாக அரசு புறம்போக்கில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு பட்டா வழங்கவேண்டும் என முன்னாள் ஊராட்சித்தலைவர் காமராஜ் கோரிக்கை மனு அளித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்ட பொன்னமராவதி தாலுகா நெறிஞ்சிகுடி வட்டம்.சேரனூர் ஊராட்சி.

சேரனூர் கிராமத்தில் களம் புறம்போக்கு மற்றும் வண்டி பாதை புறம்போக்கு நிலத்தில் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் சுமார் 50 நபர்களுக்கு மேல் வீடு கட்டி மின் இணைப்பு பெற்று வீட்டு வரி செலுத்தி குடியிருந்து வருகின்றனர். அங்கு குடியிருந்து வரும் மக்களுக்கு இடத்தினை வகை மாற்றம் செய்து நத்தம் பட்டா வழங்க வேண்டும் என இலுப்பூர் கோட்டாட்சியரிடம் சேரனூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் காமராஜ் கோரிக்கை மனு அளித்துள்ளார்.

The post பொன்னமராவதி அருகே சேரனூரில் மக்களுக்கு பட்டா வழங்க வேண்டும் appeared first on Dinakaran.

Read Entire Article