பொன்னமராவதி, பிப். 22: பொன்னமராவதி அருகே புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு பொன்னமராவதி வட்டாரக்கல்வி அலுவலர் ராமதிலகம் தலைமைவகித்தார். தலைமையாசிரியர் மணிமேகலை வரவேற்றார். ஆசிரியர் ரேணுகாதேவி ஆண்டறிக்கை வாசித்தார். வட்டாரவள மைய மேற்பார்வையாளர் நல்லநாகு, முன்னாள் கல்விக்குழு தலைவர் ராமச்சந்திரன், முன்னாள் ஊராட்சித்தலைவர் முருகேசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கிப்பேசினர். பின்னர் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.தொடர்ந்து மாணவ,மாணவிகள் பங்குபெற்ற கலைநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பள்ளி மேலாண்மைக்குழு நிர்வாகிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
The post பொன்னமராவதி அருகே அரசு பள்ளியில் ஆண்டு விழா appeared first on Dinakaran.