பையனூரில் திரைத்துறையினருக்கு 90 ஏக்கர் நிலம் மீண்டும் குத்தகை - அரசாணை வழங்கிய துணை முதல்வர்

11 hours ago 1

சென்னை: சென்னையை அடுத்த பையனூரில் உள்ள 90 ஏக்கர் நிலத்தை திரைத்துறையினருக்கு மீண்டும் குத்தகைக்கு விடும் வகையிலான அரசாணையை, திரைப்படச் சங்கத்தினரிடம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனம், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை நடிகர்கள் சங்கம் ஆகியவற்றின் வேண்டுகோளுக்கு இணங்க, உறுப்பினர்கள் நலன்கருதி குடியிருப்பு கட்டிடங்களை கட்டிக்கொள்ள ஏதுவாக செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் 90 ஏக்கர் நிலத்தை ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய்க்கு, 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்க அரசாணை கடந்த 2010-ம் ஆண்டில் வெளியிடப்பட்டது.

Read Entire Article