அரக்கோணம், மார்ச் 12: அரக்கோணம் அடுத்த ஈசலாபுரத்தை சேர்ந்தவர் ஜான்(19), கூலித்தொழிலாளி. இவர் ேநற்று முன்தினம் வேலைக்கு சென்றுவிட்டு இரவு பைக்கில் வீடு திரும்பினார். எஸ்.ஆர்.கண்டிகை அருகே சென்றபோது அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற வேன், பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஜான் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவலறிந்த அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து ஏற்படுத்திவிட்டு தலைமறைவான வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
The post பைக் மீது வேன் மோதி தொழிலாளி பலி appeared first on Dinakaran.