பைக் திருட்டு

2 hours ago 2

புதுச்சேரி, பிப், 6: புதுச்சேரி பாரதி வீதியை சேர்ந்தவர் தரன். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தரன், பைக்கை தனது வீட்டின் வெளியே நிறுத்தியுள்ளார். பின்னர் மறுநாள் அவர் எழுந்து வந்து பார்த்த போது, வாகனம் இல்லாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்தும் கிடைக்கவில்லை. அதனை யாரோ மர்ம நபர் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்து தரன் பெரியகடை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிந்து பைக்கை திருடிய நபரை தேடி வருகின்றனர்.

The post பைக் திருட்டு appeared first on Dinakaran.

Read Entire Article