விருதுநகர், அக்.19: புதிய பஸ் நிலையத்தில் இருந்து செல்லும் பேருந்துகள் கால அட்டவணையை வெளியிட கோரி கலெக்டர் அலுவலகத்தில் கவுன்சிலர்கள் மன அளித்தனர். விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நகராட்சியின் 7 கவுன்சிலர்கள் நேற்று மனு அளித்தனர். மனுவில், விருதுநகர் புதிய பஸ் நிலையம் கடந்த ஆக.21 முதல் செயல்பட துவங்கி உள்ளது. மீனாம்பிகை பங்களா பகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று, மீனாம்பிகை பங்களா நிறுத்தம் வழியாக மதுரை-சிவகாசி, சிவகாசி-மதுரை ஆகிய இரு வழித்தடங்களை இயங்க மாவட்ட நிர்வாகம் பிறப்பித்த ஆணைப்படி கடந்த அக்.16 முதல் பஸ்கள் இயங்குகின்றன.
இரு வழித்தட பேருந்துகளை தவிர மற்ற பேருந்துகளும் அதன் வழியே பயணிக்கின்றன. இருவழித்தட பேருந்துகள் தவிர்த்து மற்ற பேருந்துகள் புதிய பஸ் நிலையத்தில் இருந்து புறப்படும் நேர கால அட்டவணையை பொதுமக்களுக்கு தெரியும்படி அறிவிக்க வேண்டுமென தெரிவித்துள்ளனர்.
The post பேருந்து அட்டவணை வெளியிட கோரி மனு appeared first on Dinakaran.