காரைக்குடி, மார்ச் 29: காரைக்குடி மாநகராட்சியில் வீடுகள்தோறும் குப்பைகளை சேகரிக்க 40க்கும் மேற்பட்ட மூன்று சக்கர பேட்டரி வண்டிகள் உள்ளன. இந்த வண்டிகள் அனைத்தும் அம்பேத்கர் சிலை பின்புறம் மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வாடிக்கை. இந்நிலையில், நேற்று பழுதான பேட்டரி வண்டியை சரி செய்ய பேட்டரி மாட்டி சார்ஜ் போட்டு இருந்துள்ளனர். திடீரென அந்த வாகனத்தில் சிறிதாக தீப்பிடித்து புகை வந்துள்ளது. மேலும், தீ பரவாமல் இருக்க தூய்மை பணியாளர்கள் தண்ணீரை ஊற்றி அணைத்தனர். இதனால் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வண்டிகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. திடீர் தீயால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
The post பேட்டரி வண்டியில் திடீர் புகையால் பரபரப்பு காரைக்குடி மாநகராட்சி appeared first on Dinakaran.