வேலூர், பிப்.14: வேலூரில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட வாலிபரை போலீசார் நேற்று கைது செய்தனர். வேலூர் சாய்நாதபுரத்தைச் சேர்ந்தவர் தருஞ்சலன்(27). ஆட்டோமொபைல் கடை ஊழியர். இவர் வேலப்பாடி பூந்தோட்டம் பகுதியில் சைக்கிளில் நேற்று சென்று கொண்டிருந்தார். அவ்வழியாக 30 வயது பெண் நடந்து சென்றுள்ளார். அவரைப் பார்த்த தருஞ்சலன் அந்த பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதுகுறித்து வேலுார் தெற்கு போலீசில் அந்தப் பெண் புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ சந்தோஷ்குமார் வழக்குப்பதிவு செய்து, தருஞ்சலனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
The post பெண்ணிடம் பாலியல் சீண்டல் வாலிபர் கைது வேலூரில் appeared first on Dinakaran.