பிப்.18ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

5 days ago 5

 

விருதுநகர், பிப்.14: விருதுநகர் மாவட்டத்தில், 18, 21 ஆகிய தேதிகளில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. விருதுநகர் மாவட்ட வேளாண் இணை இயக்குநர் வெளியிட்ட தகவல்: மாவட்டத்தில் சிவகாசி, அருப்புக்கோட்டை, சாத்தூர் ஆகிய கோட்டாட்சியர் அலுவலகங்களில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் பிப்.18ம் தேதி காலை 11 மணியளவில் நடைபெற உள்ளது. அதேபோல் கலெக்டர் அலுவலகத்தில் பிப்.21ல் காலை 11 மணியளவில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. இவற்றில் விவசாயிகள் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பாக மனுக்களை நேரில் அளிக்கலாம் என தெரிவித்துள்ளார்.

The post பிப்.18ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article