சென்னை: பெண் குழந்தைகளின் காப்பகங்களில் பெண் காவலர்களை நியமிக்க வேண்டும் என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். தாம்பரம் அரசு விடுதியில் சிறுமிக்கு காவலாளி, பாலியல் தொல்லை தந்த நிலையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு காலில் அடிபட்டுள்ளதால் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை புகாரில் விடுதியின் காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
The post பெண்கள் விடுதிகளில் பெண்காவலர்களை நியமிக்க வேண்டும்: அமைச்சர் கீதா ஜீவன் அறிவுரை appeared first on Dinakaran.