மதுரை: கோயில் நிதியில் திருமணம் மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்தது. பழனி முருகன் கோயிலின் உபகோயிலாக கள்ளிமந்தையத்தில் வரதராஜ பெருமாள் கோயில் உள்ளது. வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான இடத்தில் ரூ.6.30 கோடியில் திருமணம் மண்டபம் கட்ட தடை கோரிய மனு குறித்து அறநிலையத்துறை ஆணையர் பதில் மனு தாக்கல் செய்யவும் ஐகோர்ட் கிளை நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளார்.
The post கோயில் நிதியில் திருமண மண்டபம் கட்டுவது தொடர்பான அரசாணைக்கு ஐகோர்ட் கிளை தடை!! appeared first on Dinakaran.