சென்னை: பெண் நீதிபதியை காதலிப்பதாகக் கூறி டார்ச்சர் கொடுத்த விழுப்புரத்தைச் சேர்ந்த வழக்கறிஞருக்கு தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
திருமணமாகாத பெண் நீதிபதியை பின்தொடர்ந்து காதலிப்பதாகக் கூறி தொல்லை கொடுத்த வழக்கறிஞருக்கு தடை விதித்து பார் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவரான பி.எஸ்.அமல்ராஜ் கூறுகையில், “விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த திருமணமாகாத பெண் நீதிபதி ஒருவருக்கு விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூரைச் சேர்ந்த வழக்கறிஞர் இ. சிவராஜ்(50) என்பவர் காதலிப்பதாகக்கூறி, அந்த நீதிபதியை தினமும் பின்தொடர்ந்து தொல்லை கொடுத்து வந்துள்ளார்.