பெங்களூரு விவகாரம் - மேலும் 2 வழக்கு

11 hours ago 3

பெங்களூரு,

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் வெற்றி பெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு, பாராட்டு விழா மற்றும் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி ஆகியவை பெங்களூருவில் நேற்று முன்தினம் நடந்தது. கர்நாடக அரசு சார்பில் பெங்களூரு விதானசவுதாவிலும் (சட்டசபை), சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் கர்நாடக கிரிக்கெட் சங்கம் சார்பிலும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. முதலில் விதானசவுதாவில் விழா நடந்தது. இதை காண லட்சக்கணக்கானோர் கூடியிருந்தனர்.பின்னர் சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியத்தில் பெங்களூரு அணியினருக்கு பாராட்டு விழா நடந்தது. இதை காண ரசிகர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது. லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்ததால் அங்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டு 5 பெண்கள், 6 ஆண்கள் என மொத்தம் 11 பேர் உயிரிழந்தனர். 56 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், 11 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மேலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள இருவரின் புகாரின் பேரில் கப்பன் பார்க் காவல் நிலையத்தில் ஆர்சிபி நிர்வாகி கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷன் உள்ளிட்டவை மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது.

ஏற்கெனவே இந்த விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Read Entire Article