பூதப்பாண்டி, ஜன.21: பூதப்பாண்டியை அடுத்துள்ள வரகுணமங்கலம் பகுதியை சேர்ந்தவர் முத்து(65). கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் வேலை முடிந்து மாலை சுமார் 6..45 மணியளவில் வீட்டிற்கு சாலையோரமாக நடந்து சென்றார்.வரகுணமங்கலம் ஜிம் அருகே வரும் போது, எதிரே மத்தியாஸ் நகர் பகுதியை சேர்ந்த அஜித்(25) என்பவர் தனது பைக்கில் வந்து முத்து மீது மோதியதில் தலை, இடுப்பு மற்றும் இடது காலில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனையில் அனுமதித்தனர். இது குறித்து முத்துவின் மனைவி மரியம்மாள் பூதப்பாண்டி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அஜித் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.
The post பூதப்பாண்டி அருகே பைக் மோதி தொழிலாளி படுகாயம் appeared first on Dinakaran.