புழல் சிறையில் பெண் கைதியிடம் செல்போன் பறிமுதல்

3 months ago 11

புழல், டிச. 8: புழல் பெண்கள் சிறையில் பெண் கைதியிடமிருந்து செல்போன் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் குறித்து புழல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை புழல் பெண்கள் மத்திய சிறையில், சுமார் 200க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். இதில் சென்னை பம்மல், எம்ஜிஆர் நகர் 7வது தெருவை சேர்ந்த சத்யா(29) என்ற பெண். குன்றத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் 2016ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, கடந்த ஜூலை மாதம் முதல் புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், நேற்று சிறை பெண் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சிறை அறையில் ஒரு கைதி செல்போனில் பேசிக்கொண்டிருப்பதை கண்டு, உள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, சத்யா என்ற பெண் கைதியிடமிருந்து செல்போனை பறிமுதல் செய்த சிறை பெண் காவலர்கள், இதுகுறித்து சிறை உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மகளிர் சிறை அதிகாரிகள் அளித்த புகாரின்பேரில், வழக்குப்பதிவு செய்த புழல் போலீசார், சிறைக்குள் செல்போன் எப்படி வந்தது? யார் செல்போன் சிறைக்குள் கொடுத்த அனுப்பினார்கள்? உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post புழல் சிறையில் பெண் கைதியிடம் செல்போன் பறிமுதல் appeared first on Dinakaran.

Read Entire Article