சென்னை: புழல் ஏரியில் இருந்து வினாடிக்கு 500 கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. உபரிநீர் திறப்பால் கால்வாய் ஓரம் வசிப்பவர்களுக்கு முதல்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. 21.2 அடி ஆழம் கொண்ட புழல் ஏரியின் நீர்மட்டம் 19.69 அடியாக உள்ளது. புழல் ஏரிக்கு வினாடிக்கு 1042 கனஅடி நீர் வந்துகொண்டிருக்கிறது.
The post புழல் ஏரியில் வினாடிக்கு 500 கனஅடி நீர் திறப்பு..!! appeared first on Dinakaran.