புல்மேடு வனப்பாதையில் ‘தடம் மாறி’ தவித்த 3 ஐயப்ப பக்தர்களை மீட்ட பேரிடர் குழு!

3 months ago 13

குமுளி: சபரிமலைக்கு புல்மேடு வனப்பாதையில் சென்ற 3 ஐயப்ப பக்தர்கள் ‘தடம்மாறி’ காட்டுப்பகுதிக்குள் சிக்கினர். இவர்களை பேரிடர் மீட்புப் படையினர் மீட்டனர். வனப்பகுதியில் எக்காரணம் கொண்டும் தடம்மாறி பயணிக்க கூடாது என்று வனத்துறையினர் கேட்டுக் கொண்டனர்.

ஐயப்ப பக்தர்கள் சத்திரம் - புல்மேடு, எருமேலி - பெரியபாதை ஆகிய வனப்பாதைகள் வழியே பாதயாத்திரையாக சென்று வருகின்றனர். இது அடர் வனப்பகுதி ஆகும். வனவிலங்குகளிடம் இருந்து பக்தர்களை பாதுகாக்க குறிப்பிட்ட நேரத்திலே அனுமதிக்கப்படுகின்றனர். மேலும் ஒவ்வொருநாள் காலையிலும் முதன்முதலாக வனப்பாதையில் நுழையும் பக்தர்களுக்கு வனத்துறையினர் பாதுகாப்பு அளித்து வழிநடத்திச் செல்கின்றனர்.

Read Entire Article