புறம்போக்கு நிலத்துக்கு பட்டா: தாம்பரம், வண்டலூரில் வசூல் வேட்டை

5 hours ago 2

​தாம்​பரம், வண்​டலூர் வட்​டத்​தில் புறம்​போக்கு நிலங்​களில் வசிப்​போரிடம் பட்டா பெற்​றுத் தரு​வ​தாக கூறி வசூல் நடை​பெறு​வ​தாக​வும், அப்​பாவி மக்​களை மோசடி செய்​வ​தாக​வும் புகார் எழுந்​துள்​ளது. சென்​னையை சுற்​றி​யுள்ள, 532 கிராமங்​களைச் சேர்ந்த, 29,187 குடும்​பங்​களுக்கு பட்டா வழங்​கப்​படும்; தமிழகத்​தின் பிற மாவட்​டங்​களில் ஆட்​சேபனையற்ற புறம்​போக்கு நிலங்​களில் வசிக்​கும் 57,084 குடும்​பங்​களுக்​கும் பட்டா வழங்​கப்​படும் என முதல்​வர் அண்​மை​யில் அறி​வித்​திருந்​தார். மேலும், இதனையொட்டி வழி​காட்டி விதி​கள், நடை​முறை​கள் குறித்த அரசாணை​யும் வெளி​யிடப்​பட்​டது.

அதன்​படி தரிசு நிலம், கல்​லான்​குத்​து, பாறை, கரடு, கிராம நத்​தம், அரசு நஞ்சை - புஞ்​சை, அரசு அனாதீனம், பொதுகல் வகை​பாட்டு நிலங்​களில் வசிப்​போர் பட்டா பெறலாம். வண்​டிப்​பாதை, பாதை, பாட்​டை, களம், மயானம், தோப்பு வகைப்​பாட்​டில் உள்ள நிலங்​களில் வசிப்​போர், வரன்​முறை அடிப்​படை​யில் பட்டா பெறலாம் என தெரிவிக்​கப்​பட்​டது.

Read Entire Article