
மும்பை,
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் தொடர் வரும் அக்டோபர் மாதம் தொடங்குகிறது. இந்த போட்டிக்கான வீரர்கள் ஏலம் மும்பையில் வருகிற 31 மற்றும் ஜூன் 1-ந் தேதி நடக்கிறது. இதனையொட்டி அணிகள் அனைத்தும் தற்போது தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் விவரங்களை வெளியிட்டு வருகின்றன.
அதன்படி தமிழ் தலைவாஸ் அணி சாகர், ஹிமான்ஷு மற்றும் மொயின் ஷபாகி ஆகியோரை தக்கவைத்துள்ளது.