புரட்சித் தலைவி வழியில் புரட்சித் தமிழர்! - கோவையில் இருந்து பரப்பு​ரையைத் தொடங்கும் பழனிசாமி

2 hours ago 1

2010-ல் திமுக ஆட்சியை வீழ்த்து​வதற்கான தனது வியூகப் பயணத்தை கோவையி​லிருந்து தான் தொடங்​கினார் ஜெயலலிதா. அவரது வழியைப் பின்பற்றி அதிமுக பொதுச்​செய​லாளர் பழனிசாமியும் ஆட்சிக்கு எதிரான தேர்தல் பரப்புரையை கோவையி​லிருந்தே தொடங்​கு​கிறார். 2006-11 திமுக ஆட்சியில் மின்வெட்டை கண்டித்​தும், அத்தி​யா​வசியப் பொருட்​களின் விலை உயர்வை கண்டித்தும் 2010-ல் கோவை வஉசி மைதானத்தில் அதிமுக பிரம்​மாண்ட ஆர்ப்​பாட்​டத்தை நடத்தியது.

சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்ற அந்த ஆர்ப்​பாட்​டத்​துக்கு ஜெயலலிதாவே தலைமை தாங்கி​னார். ஆர்ப்​பாட்​டத்தில் திமுக அரசுக்கு எதிராக கடுமையான விமர்​சனங்களை எடுத்து​வைத்துப் பேசி அதிமுக தொண்டர்​களுக்கு உத்வேகம் அளித்தார் ஜெயலலிதா. கோவையில் தொடங்கிய இந்தப் பயணத்தை மற்ற மாவட்டங் களுக்கும் விரிவுபடுத்திய அவர், இதை தேர்தல் பிரச்​சாரப் பயணமாகவே மாற்றிக்​கொண்​டார். 2011-ல் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்ததற்கு ஜெயலலி​தாவின் மாவட்ட வாரியான இந்த ஆர்ப்​பாட்​டங்களே அடித்தளம் அமைத்தன.

Read Entire Article