புதுச்சேரியில் மஞ்சள் அட்டை வைத்துள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 அறிவிப்பு

3 hours ago 1

புதுச்சேரி: புதுச்சேரியில் மஞ்சள் அட்டை உள்ள குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் எம்.எல்.ஏ-க்கள் பேசினர். பின்னர் முதல்வர் ரங்கசாமி பதிலளித்து பேசியது: “ரூ.13,600 கோடிக்கு 2025-26-ம் ஆண்டுக்கான பட்ஜெட் போட்டுள்ளோம். இது நிறைவேற்ற முடியுமா, நிதி இருக்கிறதா என்றெல்லாம் எம்.எல்.ஏ-க்கள் கேட்டிருந்தனர். நிச்சியமாக திட்டங்களை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. மக்களுக்கு பாதிக்காத நிலையில் வரிகள் போடலாம். எந்த வகையில் வருவாய் கூட்ட முடியுமோ அதனை அரசு கவனத்தில் எடுத்துக்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகிறது.

Read Entire Article