புதுச்சேரியில் குளிர்பானத்திற்கு பணம் தர மறுத்து வியாபாரியை தாக்கிய ரவுடிகள்: ஆளுநர் மாளிகை முன்பு சுயேச்சை எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம்

3 months ago 14

புதுச்சேரி: புதுச்சேரியில் ரவுடிகளால் தாக்கப்பட்டு தலையில் பலத்த காயம் அடைந்த வியாபாரிக்கு உரிய சிகிச்சை அளிக்ககோரி ஆளுநர் மாளிகை முன்பு சுயேச்சை எம்.எல்.ஏ நேரு தலைமையில் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியில் மளிகைக்கடை நடத்தி வரும் சந்திரன் என்பவரது கடைக்கு வந்த கும்பல் ஒன்று குளிர்பானம் குடித்துவிட்டு பணம் தர மறுத்து தகராறில் ஈடுபட்டது. அப்போது வாக்குவாதம் முற்றியதில் 3 பேர் கொண்ட கும்பல் வியாபாரி சந்திரனை சரமாரியாக தாக்கியது. இதன் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் படுகாயமடைந்த வியாபாரி சந்திரன் புதுச்சேரி அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனை அறிந்த சுயேச்சை எம்.எல்.ஏ நேரு மற்றும் வியாபாரிகள் காயம் அடைந்த சந்திரனை அரசு மருத்துவமனையிலிருந்து அழைத்து வந்து ஆளுநர் மாளிகை முன்பு போராட்டம் நடத்தினர் அப்போது போலீசாரின் பாதுகாப்பு தடுப்புகளை தூக்கி எரிந்து ஆளுநர் மாளிகை உள்ளே செல்ல முயன்றதால் போலீசாருக்கும், போராட்ட காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

 

The post புதுச்சேரியில் குளிர்பானத்திற்கு பணம் தர மறுத்து வியாபாரியை தாக்கிய ரவுடிகள்: ஆளுநர் மாளிகை முன்பு சுயேச்சை எம்.எல்.ஏ தலைமையில் போராட்டம் appeared first on Dinakaran.

Read Entire Article