புதுச்சேரி: புதுச்சேரி மாநில அந்தஸ்துக்கான கையெழுத்து இயக்கத்தை முதல்வர் ரங்கசாமி முதல் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார்.
புதுச்சேரிக்கு தனி மாநில தகுதி வேண்டும் என உருளையன்பேட்டை தொகுதி சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் பொதுநல அமைப்புகள் ஒன்றிணைந்து கடந்த மூன்று ஆண்டுகளாக பல கட்டங்களாக போராடி வருகின்றன.