பேரையூர், ஜன. 5: பேரையூர் டிஎஸ்பி துர்காதேவி உத்தரவின்படி சேடபட்டி போலீசார் பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அல்லிகுண்டத்தில் வசிக்கும் முருகன் என்பவரது மனைவி செல்வி (47) நடத்தும் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பாக்கெட்டுகளை விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடையில் இருந்த புகையிலை பாக்கெட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து செல்வியைக் கைது செய்தனர்.
The post புகையிலை விற்ற பெண் சிக்கினார் appeared first on Dinakaran.