பீரங்கியில் வெடிமருந்து நிரப்பும்போது 2 ராணுவ வீரர்கள் பலி

4 months ago 17

ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பிகனேரில் ராணுவ வீரர்கள் மூன்று பேர் பீரங்கியுடன் பயிற்சியில் ஈடுபட்டு இருந்தனர். வீரர்கள் பீரங்கியில் வெடிமருந்து நிரப்பிக்கொண்டு இருந்தபோது சார்ஜர் வெடித்து சிதறியது. இந்த சம்பவத்தில் இரண்டு ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். மேலும் ஒருவர் காயமடைந்தார். தகவல் அறிந்து விரைந்த போலீசார் காயமடைந்த வீரர் மீட்கப்பட்டு ஹெலிகாப்டர் மூலமாக சண்டிகர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். உயிரிழந்த ராணுவ வீரர் மிஸ்ரா உத்தரப்பிரதேசத்தை சேர்ந்தவர். ஜிதேந்திரா ராஜஸ்தாவை சேர்ந்தவர். இருவரது உடல்களும் மீட்கப்பட்டு சூரத்கர் ராணுவ மையத்துக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது.

The post பீரங்கியில் வெடிமருந்து நிரப்பும்போது 2 ராணுவ வீரர்கள் பலி appeared first on Dinakaran.

Read Entire Article