பிளஸ்-1 பொதுத்தேர்வில் 11,070 பேர் ஆப்சென்ட்

10 hours ago 1

சென்னை,

பிளஸ்-2 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான பொதுத்தேர்வு நேற்று முன்தினம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத் தேர்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று தமிழ் உள்பட இதர மொழிப் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. வருகிற 27-ந்தேதி வரை தேர்வு நடைபெறுகிறது. ஒவ்வொரு தேர்வுக்கும் 2 முதல் 4 நாட்கள் வரை இடைவெளி விட்டு நடைபெறுகிறது.

தேர்வுக்காக 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்வை தமிழ்நாட்டில் உள்ள 7 ஆயிரத்து 557 பள்ளிகளில் இருந்து, 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்கள், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகள் என மொத்தம் 8 லட்சத்து 18 ஆயிரத்து 369 பேர் எழுத இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், பிளஸ்-1 பொதுத்தேர்வில் இன்று நடந்த மொழிப்பாடத்தேர்வை 11,070 பேர் எழுதவில்லை என்றும் 8,07,299 பேர் தேர்வு எழுதியுள்ளனர் என்று அரசு தேர்வு இயக்ககம் தெரிவித்துள்ளது.

Read Entire Article