பாரிஸ்: கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரிசில் நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் நேற்றிரவு நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் உலகின் நம்பர் 1 வீராங்கனையான பெலாரஸ்சின் அரினா சபலென்காவும், அமெரிக்காவின் கோகோ காப்பும் மோதினர். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதல் 2 செட்டுகளை இருவரும் ஆளுக்கொன்றாக கைப்பற்றினர். இதனால் 3-வது செட் யாருக்கு என்ற பரபரப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டது. மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நடைபெற்ற 3-வது செட்டை கைப்பற்ற இருவரும் விறுவிறுப்பாக மோத இறுதியில் கோகோ காப்பின் கை ஓங்கியது. பரபரப்பான இந்த ஆட்டத்தில் கோகோ காப் 7-6, 6-2 மற்றும் 6-4 என்ற செட் கணக்கில் சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இந்த தொடரில் கோகோ காப் சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல் முறையாகும்.
The post பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: கோகோ காப் சாம்பியன்; நம்பர் 1 சபலென்காவை வீழ்த்தினார் appeared first on Dinakaran.