
பாரீஸ்,
'கிராண்ட்ஸ்லாம்' அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டி வருகிற 25-ந்தேதி பாரீசில் தொடங்குகிறது. இதையொட்டி தற்போது தகுதி சுற்று ஆட்டங்கள் தொடங்கி நடந்து வருகிறது. இதன் முதலாவது சுற்றில் இந்திய வீரர் சுமித் நாகல் 6-1, 6-1 என்ற நேர் செட்டில் அமெரிக்காவின் மிட்செல் குருகரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
இன்னும் 2 வெற்றி பெற்றால் அவர் பிரதான சுற்றை எட்ட முடியும். உலக தரவரிசையில் 170-வது இடம் வகிக்கும் சுமித் நாகல் அடுத்து ஜூரிச் ரோடியானோவை (ஆஸ்திரியா) சந்திக்கிறார்.