பிரிக்ஸ் உச்சி மாநாடு வரும் 22ம் தேதி ரஷ்யாவுக்கு செல்கிறார் பிரதமர் மோடி

3 months ago 15

புதுடெல்லி: ரஷ்யாவில் உள்ள கசானில் வரும் 22 மற்றும் 23ம் தேதிகளில் 16வது பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடிக்கு ரஷ்ய அதிபர் புடின் அழைப்பு விடுத்துள்ளார். அதை ஏற்று பிரதமர் மோடி வரும் 22ம் தேதி ரஷ்யா செல்கிறார். அப்போது பிரிக்ஸ் அமைப்பில் உள்ள பல்வேறு நாட்டு தலைவர்களுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் ஆலோசனை நடத்துகிறார்.

பிரிக்ஸ் உச்சிமாநாடு உலகளாவிய வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கான பலதரப்புவாதத்தை வலுப்படுத்துதல் என்ற கருப்பொருளுடன் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், இதுவரை பிரிக்ஸ் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்ட முயற்சிகளின் தற்போதைய நிலை மற்றும் எதிர்கால ஒத்துழைப்புக்கான சாத்தியங்கள் ஆகியவை குறித்து விவாதிக்கப்படும்.

The post பிரிக்ஸ் உச்சி மாநாடு வரும் 22ம் தேதி ரஷ்யாவுக்கு செல்கிறார் பிரதமர் மோடி appeared first on Dinakaran.

Read Entire Article