சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடி கழிவுநீர் சுத்திகரிப்பு மையம்: அறிக்கை கோரும் ஐகோர்ட்

3 weeks ago 7

சென்னை: சிந்தாதிரிப்பேட்டை நவீன மீன் அங்காடியில் திடக்கழிவு, கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதா?, வாகன நிறுத்தங்கள் அமைக்கப்பட்டுள்ளதா? என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசு, சென்னை மாநகராட்சிக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் கீழ் சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ரூ.2 கோடி 92 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நவீன மீன் அங்காடியை, துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், கடந்த 7-ம் தேதி திறந்து வைத்தார். 102 கடைகள் அமைக்க உள்ள இந்த அங்காடியில் முறையாக திடக்கழிவு மேலாண்மையை அமல்படுத்தாமல் துவங்கியுள்ளதாகக் கூறி, க்ரீன் கேர் என்ற சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் அதன் நிறுவனர் சையது கட்டுவா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Read Entire Article