லக்னோ: உ.பி., மாநிலம் பிரயாக்ராஜில் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். 19 பேர் காயமடைந்துள்ளனர். சத்தீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள் கும்பமேளாவுக்கு சென்று கொண்டிருந்தபோது பிரயாக்ராஜ்-மிர்சாபூர் நெடுஞ்சாலையில் உள்ள மேஜா பகுதியில் அதிகாலை 2.30 மணியளவில் விபத்து ஏற்பட்டது. உயிரிழந்த அனைவரும் காரில் பயணித்தவர்கள்.
The post பிரயாக்ராஜில் மகா கும்பமேளாவுக்குச் சென்ற பேருந்து மீது கார் மோதிய விபத்தில் 10 பக்தர்கள் பலி appeared first on Dinakaran.