பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன் காலமானார்

6 months ago 24

வாஷிங்டன்,

இந்தியாவை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்தார்.

உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசைன் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இதனிடையே, 73 வயதான ஜாகிர் உசைன் தற்போது அமெரிக்காவில் வசித்து வந்தார்.

இந்நிலையில், ஜாகிர் உசைனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தநிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா, மேற்கு வங்க முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, உத்தர பிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மத்திய மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.

Read Entire Article