மதுரை: பிரபல எழுத்தாளரும், ஆன்மிக சொற்பொழிவாளருமான இந்திரா செளந்தராஜன் மதுரையில் காலமானார். அவருக்கு வயது 65. அவரது மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மதுரை டிவிஎஸ் நகர், சத்யசாய் நகர் 4-வது குறுக்குத்தெரு பகுதியில் வசித்தவர் பிரபல எழுத்தாளர் இந்திரா செளந்தராஜன். உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை வீட்டில் இருந்தபோது, திடீரென மயங்கி விழுந்த நிலையில், அவர் மரணம் அடைந்ததாக கூறப்படுகிறது.
இந்திரா செளந்தர்ராஜனின் உடல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்கென வைக்கப்பட்டது. தமிழறிஞர் சாலமன் பாப்பையா உள்ளிட்ட எழுத்தாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் அஞ்சலி செலுத்தினர்.